தனிநாயகம் அடிகள் நினைவரங்கம் 2024

யாழ்ப்பாண தமிழ்ச் சங்கம் நடத்தும் தமழ் தூது தனிநாயகம் அடிகள் நினைவரங்கம் 04 10 2024 வெள்ளி மாலை 4 மணிக்கு யாழ் பிரதான வீதியில் உள்ள திருமறைக்கலாமன்றத்தின் கலைத் தூது கலையகத்தில் தமிழ்ச்சங்க உப தலைவர் அருட்பணி ஜெறோ செல்வநாயகம் அடிகளார் தலைமையில் நடைபெறவுள்ளது

இந்நிகழ்வில் தொடக்கவுரையை தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் தி. வேல்நம்பியும் வாழ்த்துரையை தமிழ்ச் சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ. சண்முகதாசும் மாணவர் உரையை புனித பத்திரிசியார் கல்லூரியின் குரு மாணவன் அன்ரனிகுமார் அனோஜும் ஆற்றுவர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்வியியல் துறை விரிவுரையாளர் இ. சர்வேஸ்வரா – இலங்கைப் பல்கலைக்கழக முறைமையில் சேர் பொன் அருணாச்சலத்தின் வகி பாகம் – தமிழ்த் தூது தனிநாயகம் அடிகளாரை உள்நிறுத்திய பார்வை என்ற பொருளில் நினைவுப் பேருரை ஆற்றுவார்

நிகழ்வில் தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் ச. லலீசன் அறிமுகவுரையையும் திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குநர் யோன்சன் ராஜ்குமார் கருத்துரையையும் ஆட்சிக்குழு உறுப்பினர்களான நா. குமரிவேந்தன் வரவேற்புரையையும் யோ. நிவேதன் நன்றியுரையையும் வழங்குவர்.

Bookmark the permalink.

Comments are closed.