
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினரும் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளருமாகிய திரு.கு.பாலஷண்முகனின் தாயார் சிவபாக்கியம் குமரேசன் கடந்த 15.07.2017 அன்று காலமானார். இறுதிக் கிரியைகள் 16.07.2017 அன்று கொக்குவில் கருவேலடி ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றன. தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். தமிழ்ச்சங்கப் பொதுச் செயலாளர் திரு. ச.லலீசன் தலைமையில் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது. வலம்புரி நாளிதழில் அஞ்சலி விளம்பரமும் பிரசுரிக்கப்பட்டது. அவரது பிரிவால் துயருறும் யாவருக்கும் எமது அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.